2 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர்

                                  - மாறகற்றி
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர் ஆனந்தத் தேறலே -

சிவானந்தத் தேனை அளிப்பவர் தென்கடையூர் சிவபெருமான். அவரை யார் போற்றுகிறார்கள்?
அறத்துக்கு மாறான பாவங்களைச் செய்வதிலிருந்து விடுவித்து, அறமானவற்றையே அடையச்
செய்யும் பல ஊரிலும் இருக்கும் அன்பர்கள் நன்றி மறவாமல் துதித்துப் போற்றுகிறார்கள்.

மாயூரம் தரங்கம்பாடி புகை வண்டிப் பாதையில் உள்ள ஊர். சிவபெருமான் மார்க்கண்டேயனைக்
காப்பாற்ற இயமனைக் காலால் உதைத்து வீழ்த்திய தலம்.

இறைவன் : அமிர்தகடேஸ்வரர்
இறைவி   : அபிராமி
தலமரம்    : பிஞ்சிலம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment