30 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவீழிமிழலை

                                      - முன்னரசும்
காழி  மிழலையருங்  கண்டுதொ ழக்காசளித்த
வீழி   மிழலை  விராட்டுருவே -

எல்லாராலும் நினைக்கப்படும் திருநாவுக்கரசரும், சீர்காழியில் தோன்றிய  திருஞானசம்பந்தரும்
தம்மைக் கண்டு வணங்கிய காலை அவர்களுக்குப் படிக்காசு தந்த, திருவீழிமிழலையில்  வீற்றிருக்கும்
பிரபஞ்ச ரூபமான பரம்பொருளாகிய சிவனே!

பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது. சம்பந்தர் 15 பதிகங்கள், அப்பர் 8 பதிகங்கள்.
வீழி என்பது ஒரு வகைச் செடி. வீழிச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் வீழிமிழலை. பல சிறப்புகள் உடைய தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment