26 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமீயச்சூர்
மீயச்சூர் தஞ்சை பேரளம் நிலையத்துக்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

                                  - ஓகாளக்
காயச் சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்என்னும் வெண் நெருப்பே -

திருமீயஞ்சூரில் ஒளிவடிவாய் விளங்கும் இறைவன் குளிர்ச்சி பொருந்திய வெண்ணீற்றை அணிந்திருக்கிறான். காண்பவர்கள் வெறுத்து ஓகாளிக்கும் தன்மையுடைய உடல் பற்றை விட்டொழித்து நல்ல கதியை அடைய விரும்புபவர்  திருமீயச்சூரில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானைச் சூழ்வர்.

திருஇளங்கோயில்
                                  - மாயக்
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே -

பொய் முதலிய குற்றங்கள் கோயில் கொண்டிருக்கும் நெஞ்சமுடைய கயவர்களால் நெருங்க முடியாதவன் திருஇளங்கோயிலில் ஞானவடிவாய் இனிமை மயமாய் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment