28 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாம்புரம்

                                                       - ஆடுமயில்
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே -

பாம்புபுரம் - பாம்புரம் எனப்படுகிறது.
காம்பு உரங்கொள் தோளியர் - மூங்கில் போன்ற அழகிய வலிமை பொருந்திய தோள்களை உடைய மகளிரும், தோகை விரித்து ஆடுகின்ற மயில்களும்  நிறைந்துள்ள சோலையுடைத்து திருப்பாம்புரம்
என்னும் பதி. இங்கே மெய்ப் பொருளாய் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

இத்தலம் பேரளம் புகை வண்டி நிலையத்துக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ராகு,கேது போன்ற சர்ப்பதோஷங்கள் விலக ஒரு பிரார்த்தனைத் தலம்.
சம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் :பாம்புரேஸ்வரர்
இறைவி   : வண்டார்குழலி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment