3 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர் மயானம்

                                 - வன்மையிலாச்
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதுஓங்கும்
நற்கடவூர் வீரட்ட நாயகனே -

மேன்மை பொருந்திய நற்கடவூர் வீரட்டத்தில் வீற்றிருக்கும் நாயகனாம்  சிவபெருமானை
மென்மையான சொற்களைச் சொல்லித் துதிக்கும் உயர்ந்த பண்புடையவர்கள் எப்போதும்
துதிப்பார்கள்.

இங்கு கோயில் உண்டேயன்றி ஊர் இல்லை. இயமனைச் சினந்து வீழ்த்திய காரணத்தால்' மயானம்'
என்கின்றனர்.திருமயானம், திருமெய்ஞானம் என வழங்கப்படுகிறது.

இறைவன் :பிரமபுரீஸ்வரர்
இறைவி   : மலர்க்குழல் மின்னம்மை
தீர்த்தம்    : காசிதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment