25 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

அம்பர் பெருந் திருக்கோயில், அம்பர் மாகாளம்

மாயூரத்திலிருந்து திருவாரூர் போகும் இருப்புப்பாதை வழியில் அம்பர் பெருங்கோயில் உள்ளது.
இக்கோயிலின் மேற்கே 2 கி. மீ தூரத்தில் திருமாகாளம் உள்ளது. மாகாளம்- கொடிய நஞ்சு.
தேவர்கள் சிவபெருமானுக்கு நஞ்சு தந்த பாவம் போக வழிபட்ட தலம் ஆதலால் அம்பர் மாகாளம் எனப்பட்டது.

                                   - கூட்டாக்
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே 
                                       - ஒருவந்தம்
மாகாளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளத்து அன்பர் மனோல யமே -

மேன்மையுடையவர்கள் கருவிலேயே தீமை செய்யும் தீய பண்பினரைச் சேரமாட்டார்கள்.
இவர்கள் முழுமையான ஞானத் திரட்டாய் விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள
திருவம்பர் எனும் தலத்தில் வாழ்கிறார்கள்.

கொடிய நஞ்சு உண்டவரைத் திண்ணமாகக் கொல்லும் தன்மையுடையது. கொடிய நஞ்சைக்
கொடுத்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, மதனைத் துரத்துகின்ற மாகாளம் எனும் பதியில் அன்பர்கள்
மனதில் ஒடுங்கி வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment