27 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்திலதைப்பதி

                              - வளங்கோவை
நாடும் திலத நயப்புலவர் நாடோறும்
பாடும் திலதைப் பதிநிதியே -

செல்வ வளம் உடைய தலைவர்களை தினந்தோறும் நாடிச் செல்லும் திலத நயப் புலவர்கள்
நாள்தோறும் திருத்திலதைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பாடிப்
பரவுவார்கள்.

இவ்வூர் சிதிலைப்பதி, திலதர்ப்பணபுரி, மதிமுத்தம் என்று வழங்கப்படுகிறது. திலதர்ப்பணபுரியே திலதைப்பதி என மருவிற்று. அரிசிலாற்றங்கரையில் உள்ளது. திலம் என்றால் எள்.இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்கு
உரிய தலம் .

இறைவன் :முக்தீஸ்வரர்
இறைவி   : பொற்கொடிநாயகி
தலமரம்   : மந்தாரை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment