23 September 2013

இதுவரை.....

திருவருட்பிரகாச வள்ளலார் திரு .இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் திருமுறையின் இரண்டாம் நூல் விண்ணப்பக்
கலிவெண்பா. இதில் வள்ளலார் அவர்கள் தேவாரப் பதிகங்கள் அன்பு நிறைந்து புகழும் இறைவனுடைய சிவமூர்த்தங்களை எல்லாம் தனித்தனியாக சிந்தித்தும், பொதுவில் வழி பட்டும்,
இறை வழிபாட்டிற்குத் தடங்கலாய் இருக்கும் செய்கைகளையும், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது இறைவன் அருள்மழை பொழிவதையும், அருளை இறைஞ்சியும், திருவடி இன்பம் தந்துஅருள் புரியவேண்டும் என விழைந்தும் தம் கோரிக்கைகளையெல்லாம் என்புருக நெகிழ்ந்து
விண்ணப்பித்துக் கொள்கிறார்கள். நாமும் உள்ளம் நெகிழ இறைவன் திருத்தாளில் மனம் நெகிழ விண்ணப்பித்துக் கொண்டால் இறைவன் நமக்கும் அருள் புரிவான்.
இதுவரை 117 கண்ணிகளின் பொருளைப் பார்த்தோம். 279 வது கண்ணிவரை திருத்தலங்களின் தரிசனம் கிடைக்கிறது. பின்னர் 290வது கண்ணியிலிருந்து தன் விண்ணப்பத்தை பலவாறு வனைந்து
வனைந்து எடுத்துச் சொல்கிறார்.
 ''நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து
நிறைந்து,'' படித்துப் படித்து இன்புற வேண்டிய நூல் திருவருட்பா.

மீண்டும் தொடரவும், முழுமையடையச் செய்வதையும், அவன் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

''நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்குஉன் இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய் நாவாலுன் ஐந்தெழுத்து எளியேன் ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள் வள்ளலே போற்றி நின் அருளே''
                     அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை.


No comments:

Post a Comment