1 March 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநொடித்தான் மலை
                                     - எண்ணிறைந்த
சான்றோர்  வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே -

கயிலாயத்தின் தென்பகுதி, வானவர் வந்து எதிர் கொள்ள  வெள்ளை யானையின் மீது சுந்தரர்
சென்று சேர்ந்த விண்கயிலை இது என்பர். மனித உடலுடன் சென்று வணங்குதற்கு இயலாதது
என்று அறிஞர்கள் கூறும் தலம்.
எண்ணிக்கையில் அடங்காத சிவத் தொண்டர்கள் சென்று வணங்கும்படியானது இம்மலை. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தேன்கலந்த பாலின் சுவையாய் விளங்குபவன்.
இச்சுவையை அனுபவிக்க இயலுமே தவிர எழுத்தால் எழுதவொண்ணாது.
இருந்த இடத்தில் இருந்தபடியே கயிலைநாதனை வணங்குவோமாக.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment