18 March 2014

திருவடித் தாமரைகள்

குழந்தை அழுதால் உடனே தாய் என்ன வேலை செய்தாலும் ஓடி வருவாள்.
அது போல தன்னை உளங்குழைந்து,'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி,'
கூப்பிட்டால் இறைவன் வருவான் என ஆழ்வார்களும், நாயன்மார்களும்
உறுதிபடக் கூறினார்கள். ஆனால் சிவபெருமான் காதில் கேட்ட உடன் வருவாரா........?
வள்ளல் பெருமான் என்ன சொல்கிறார்?

பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
பொற்றாள் பொறாஎம் புலம்பு - சிவநேசவெண்பா

சிலதாய்மார்கள் குழந்தை அழுதால் உடனே ஓடிப்போய்ப் பார்க்க மாட்டார்களாம்! இருடா கண்ணே
சற்றுப் பொறு, இதோ வந்து விட்டேன், ஒரு நிமிடம், இதோ, அதோ எனக் காலதாமதம் செய்வார்கள்! சிவபெருமானே! நீயும் பெற்றதாய் போல் சிறப்பு வாய்ந்தவன் தான். ஆனாலும் நீகூட சில சமயங்களில் கொஞ்சம் தாமதம் செய்யக்கூடும்! ஆனால் உன் திருவடித்தாமரைகளோ தாயைவிட உயர்ந்தது, உனக்குத் தெரியுமா? நீ பொறுத்தாலும் என்னுடைய புலம்பலைக் கேட்டு விட்டால் கணமும் தாமதிக்காது உடனே எம்மை நோக்கி ஓடோடி வந்துவிடும்.
உன்பொன் போன்ற திருவடிகளுக்கு வந்தனங்கள்!




No comments:

Post a Comment