2 March 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருவெள்ளிமலை, திருகயிலைமலை

                                - வான்தோய்ந்த
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்து இறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுதல்
தாய்க்கும் கிடையாத தண்ணருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும்  கயிலை மலையானே -

வெண்பனி மூடப்பெற்ற இமயமலைச் சிகரங்களில் ஒன்று வெள்ளிமலை. மேருமலை, பொன்மலை என்றும் அழைக்கப்படுகிறது. இமயத்தின் ஒருபகுதி கயிலை.

வானுலக இந்திரர்களும், பிரமர்களும், திருமால்களும் வந்து வணங்கி வழிபடும் தலம் வெள்ளிமலை.
ஈன்றெடுத்த தாயினும் சாலப் பரிந்து, சுகம் தரும் அருள் மழை பொழிபவன், மெய்யன்பர்
உள்ளத்தில் காட்சியளித்துத் திருவருள் புரிபவன்,  கயிலை மலையில் வீற்றிருப்பவன்.

இத்துடன் விண்ணப்பக்கலிவெண்பாவின் வள்ளலார் பார்வையில் 279 திருத்தல தரிசனம் நிறைவு
பெறுகிறது. 

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



No comments:

Post a Comment