27 February 2013

திருத்தொண்டத்தொகை

மும்மையா  லுலகாண்ட   மூர்த்திக்கு    மடியேன்
முருகனுக்கும்  உருத்திர  பசுபதிக்கு  மடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த  தாதைதாள் மழுவினா லெறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.   - சுந்தரர்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment