23 February 2013

அப்பர் தேவாரம்

திருவொற்றியூர்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்

காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்

பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை

ஓம்பிநீ உய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே     1


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்

சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது

மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா

துனையுனு முணர்வை நல்கா  யொற்றியூ  ருடைய கோவே   2

திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment