24 February 2013

தேவாரம் - சுந்தரர்

திருவொற்றியூர்

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றியூரே.

பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவா ரிட்ட
உணங்கல் கவர்வா னொற்றி யூரே.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment