2 October 2012

9. திருவருட்பா


தேன்என இனிக்கும் திருவருட் கடலே

தெள்ளிய அமுதமே சிவமே

வான் என நிற்கும் தெய்வமே முல்லை

வாயில்வாழ் மாசிலா மணியே

ஊன் என நின்ற உணர்விலேன் எனினும்

உன் திருக் கோயில்வந் தடைந்தால்

ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா

ஈதுநின் திருவருட் கியல்போ.

       திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment