12 October 2012

11. தேவாரம்

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துலங்கும் எண்தோள் சுடர் மழைப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
நீதியா நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே.

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
அண்டனே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே.

                     
                        திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment