26 October 2012

15. நமச்சிவாய சங்கீர்த்தன லஹிரி

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
     
 பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
       
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
       
 கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       
 நமச்சி வாயத்தை நான்மற வேனே.

            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment