23 October 2012

13. போற்றித் திருப்பதிகம்

அருள்தரல் வேண்டும் போற்றிஎன்  அரசே
            அடியனேன் மனத் தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றி எந்தாயே
            ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருளுறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
            சிந்தை நைந் துலகிடை மயங்கும்
மருளறல் வேண்டும் போற்றிஎன் குருவே
            மதிநதி வளர்சடை மணியே.

மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
            வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
            அருளமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின்சீரே
          பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவில் பேரொளியே போற்றி என் தன்னைத்
          தாங்குக போற்றிநின் பதமே.
                     
                   திருச்சிற்றம்பலம்
              


No comments:

Post a Comment