16 October 2012

12. தேவாரம்

         

உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம்

பெருவினைப்பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான்மிக்க

அருவி பொன் சொரியும் அண்ணாமலையுளாய் அண்டர்கோவே

மருவிநின் பாதமல்லால் மற்றொறு மாடிலேனே.


பைம்பொன்னே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய்

செம்பொன்னே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொன்னே கொழித்து வீழும் அணியணா மலையுளானே

எம்பொன்னே உன்னை அல்லால் யாது நான் நினைவிலேனே.
                         

                           திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment