Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

25 August 2014

105. அருணாசல அட்சர மணமாலை

105. என் போலும் தீனரை இன்புறக் காத்துநீ
         எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா!

எந்நாளும் என்போன்ற எளியவரை இன்பமடையும்படிக் காத்து வாழ்ந்து அருள் புரிவாயாக.
ஶ்ரீரமணரைப் போன்று தன்னை உணர்ந்து தன் மயமானவர்கள்,  அகந்தையற்றவர்களாதலின்
தற்பெருமையற்றவர்கள். எனவே 'என் போலும் தீனரை' என்று தன்னையும் அடியார் கூட்டத்தில் ஒருவர் ஆக்கினார். அடியாருக்கும் எனக்கு அருளியது போல 'தன்னை அறியும்'  விழிப்புணர்வை அருள்வாய்.

106. என்பு உருகு  அன்பர்தம் இன்சொல்கொள் செவியுமென்
          புன்மொழி  கொளஅருள் அருணாசலா

ஆன்றோர்களின் எலும்பையும் உருகச் செய்யும் அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கேட்கும் செவிகள்!
இன்சொல் கேள் ''தோடுடைய செவிகள்!''
''அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவியழகு'' என்பார் வள்ளலார்.

இத்தகைய உன் செவி என் புன்மொழிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! இது வெளிப்படையான
கருத்து. ஆனால் இதன் உட்பொருள் என்ன?

அட்சரங்களால் தொடுக்கப்பட்ட இம்மணமாலை புன் மொழியாகுமா? தன்னைத் தான் அறிய,
வழி காட்டும் 'மறையாக' அல்லவா மணமாலை விளங்குகிறது!
இம்மணமாலையை அன்பர்களும் படித்து என்புருகி அருணாசலனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்
என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
தன்னடக்கம் என்பது யோகிகள் அணியும் மணிமகுடம்.







23 March 2013

அப்பர் தேவாரம்


சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்

உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேனடி   யேனதி கைக்கெடில

வீரட்டா னத்துறை யம்மானே.

திருச்சிற்றம்பலம்

21 March 2013

அப்பர் தேவாரம்

கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே

வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர்  பாகத் தானே

அடியிணை  பரவ    நாளும் அடியவர்க் கருள்செய் வானே

கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே


காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே

நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே

ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங்

கோலமார் சடையினானே கோடிகா வுடைய கோவே.


திருச்சிற்றம்பலம்

19 March 2013

தேவாரம் - அப்பர்


திருக்கோடிகா

நெற்றிமேற்  கண்ணி  னானே  நீறுமெய்  பூசி னானே
கற்றைப்புன்  சடையி  னானே  கடல்விடம்  பருகி னானே
செற்றவர்  புரங்கள்  மூன்றுஞ்  செவ்வழல் செலுத்தி  னானே
குற்றமில்  குணத்தி  னானே  கோடிகா வுடைய கோவே

திருச்சிற்றம்பலம்

13 March 2013

தேவாரம் - அப்பர்

திருக்கச்சியேகம்பம்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே

திருச்சிற்றம்பலம்

12 March 2013

அப்பர் தேவாரம்


திருவாரூர் - பழமொழி.


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு  மாரூரரைக்

கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே

 திருச்சிற்றம்பலம்

2 March 2013

அப்பர் தேவாரம் - திருவையாறு

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


திருச்சிற்றம்பலம்

1 March 2013

திருஅங்கமாலை - தேவாரம்

(தொடர்ச்சி)

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலாட்டிப் போற்றி யென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ரருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா  னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
                                                                                 - அப்பர்

திருச்சிற்றம்பலம்

28 February 2013

திருஅங்கமாலை - தேவாரம்


தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி  தேருந்  தலைவனைத் தலையே நீவணங்காய்.

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை
எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிற மெப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய்  - மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்து கண்டாய். - அப்பர்

திருச்சிற்றம்பலம்

27 February 2013

திருத்தொண்டத்தொகை

மும்மையா  லுலகாண்ட   மூர்த்திக்கு    மடியேன்
முருகனுக்கும்  உருத்திர  பசுபதிக்கு  மடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த  தாதைதாள் மழுவினா லெறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.   - சுந்தரர்

திருச்சிற்றம்பலம்

25 February 2013

அப்பர் தேவாரம்

திருவொற்றியூர்

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து வொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.

திருச்சிற்றம்பலம் 

24 February 2013

தேவாரம் - சுந்தரர்

திருவொற்றியூர்

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றியூரே.

பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவா ரிட்ட
உணங்கல் கவர்வா னொற்றி யூரே.

திருச்சிற்றம்பலம்.

23 February 2013

அப்பர் தேவாரம்

திருவொற்றியூர்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்

காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்

பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை

ஓம்பிநீ உய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே     1


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்

சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது

மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா

துனையுனு முணர்வை நல்கா  யொற்றியூ  ருடைய கோவே   2

திருச்சிற்றம்பலம்


16 October 2012

12. தேவாரம்

         

உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம்

பெருவினைப்பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான்மிக்க

அருவி பொன் சொரியும் அண்ணாமலையுளாய் அண்டர்கோவே

மருவிநின் பாதமல்லால் மற்றொறு மாடிலேனே.


பைம்பொன்னே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய்

செம்பொன்னே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொன்னே கொழித்து வீழும் அணியணா மலையுளானே

எம்பொன்னே உன்னை அல்லால் யாது நான் நினைவிலேனே.
                         

                           திருச்சிற்றம்பலம்

12 October 2012

11. தேவாரம்

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துலங்கும் எண்தோள் சுடர் மழைப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
நீதியா நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே.

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
அண்டனே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே.

                     
                        திருச்சிற்றம்பலம்