7 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்தனென  துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
                                       
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு  புறத்துமரு  கடுத்திரவு   பகற்றுணையதாகும் - திரு

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர்  சிவத்ததொடை யெனச்சிகையில்  விருப்பமொடு சூடும் - திரு

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும்  உடைப்படைய  அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் - திரு

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் - திரு

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் -திரு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே - திரு

திருச்சிற்றம்பலம்                                                   --அருணகிரிநாதர்




திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்த னெனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு - மறத்தைநிலை காணும்
                                                                                         - திருத்தணியில்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை - கழற்குநிக ராகும்
                                                                                          - திருத்தணியில்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை - விதிர்க்கவளைவாகும்
                                                                                             - திருத்தணியில்

திருச்சிற்றம்பலம்                                             - அருணகிரிநாதர்


5 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

சுரர்க்குமுநி  வரர்க்குமக  பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர்  தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் - திருத்தணி

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்ப அலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் -  திருத்தணி

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் - திருத்தணி

திருச்சிற்றம்பலம்

4 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

பழுத்தமுது  தமிழ்ப்பலகை யிருக்குமொரு

கவிப்புலவன்  இசைக்குருகி  வரைக்குகையை  யிடித்துவழி காணும்  - திருத்தணியில்

பசித்தலகை  முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்  -  திருத்தணியில்

                                                                                                  - அருணகிரிநாதர்

3 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன  தனத்ததன தான

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிகராகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!- திருத்தணியில்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் - திருத்தணியில் (தொடரும்)


                                                                       -அருணகிரிநாதர்

2 March 2013

அப்பர் தேவாரம் - திருவையாறு

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


திருச்சிற்றம்பலம்

1 March 2013

திருஅங்கமாலை - தேவாரம்

(தொடர்ச்சி)

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலாட்டிப் போற்றி யென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ரருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா  னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
                                                                                 - அப்பர்

திருச்சிற்றம்பலம்