Showing posts with label 67. அருணாசல அட்சர மணமாலை. Show all posts
Showing posts with label 67. அருணாசல அட்சர மணமாலை. Show all posts

21 July 2014

67. அருணாசல அட்சர மணமாலை

பீதியில் உனைச்சார் பீதியில் எனைச் சேர்
     பீதி உன்றனுக்கு ஏன் அருணாசலா

பீதி +இல் - பயம் இல்லாத, பீதி - அச்சம்

அகில உலகங்களையும் ஆளும் பரமனுக்கு ஏது அச்சம்?  அச்சமற்ற உன்னை, வந்து சேர வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். (பீதி இல் எனைச் சேர்)என் பயத்தைப் போக்கி என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்வாயாக.  என் அகந்தையை அகற்றி அருள்புரிவாயாக. அருணாசலா!

அருணாசல நாமத்தைக் கேட்டவுடன் சகலத்தையும் துறந்து , எந்த பயமும் இன்றி அண்ணாமலையை அடைந்து அருட் பேறு பெற்ற மகரிஷியின் வாழ்க்கையைக் குறிக்கிறது இக்கண்ணிகள்.