Showing posts with label 65. அருணாசல அட்சரமணமாலை. Show all posts
Showing posts with label 65. அருணாசல அட்சரமணமாலை. Show all posts

19 July 2014

65. அருணாசல அட்சரமணமாலை

பார்த்தருள் மாலறப் பார்த்திலை யெனின் அருள்
    பாருனக் கார் சொல்வார் அருணாசலா

அருணாசலனே! என்னை உன் அருட் பார்வையால் பார்த்து, அகந்தை மயக்கத்தை நீக்குவது  உன் கடமை! உன் கருணை நிறைந்த பார்வையை என் மீது திருப்பவில்லையென்றால் உன்னிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்?
எதை எடுத்துச் சொல்ல வேண்டும்? கருணை செய்தல் வேண்டும் என்பதை!

'பார்த்திலை' என்ற சொல் 'பார்த்தாய்' என்ற பொருளிலும்  வரும்.
உன் அருட்பார்வையால் என் அகந்தை மயக்கத்தை நீக்கி அருளினையே. உன் திருவருளின் பெருமையை எவ்வாறு எடுத்துச் சொல்வேன் அருணாசலா!

இறைவனின் அருட்பார்வை இருந்தால்,''எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் செய வல்லான் தனையே ஏத்து,'' என்கிறார் வள்ளலார்.