Showing posts with label 21. அருணாசல அட்சர மணமாலை. Show all posts
Showing posts with label 21. அருணாசல அட்சர மணமாலை. Show all posts

5 June 2014

21. அருணாசல அட்சர மணமாலை

கெஞ்சியும் வஞ்சியாய் கொஞ்சமும் இரங்கிலை
     அஞ்சல் என்றே அருள் அருணாசலா

கெஞ்சுதல்- மீண்டும் மீண்டும் வற்புறுத்தல்; வஞ்சி - ஏமாற்றுதல், பெண்; இரங்கிலை - இரக்கம் கொள்ளவில்லை; அஞ்சல் - பயம் வேண்டாம்

அருணாசலனே! நீ உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்பவரை, வேண்டுபவரை 'வஞ்சியாய்'- ஏமாற்றமாட்டாய்!
'கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன் அருணாசலன்' என எவருமே சொல்லமுடியாதவாறு கருணை மிகுந்தவன் நீ!
ஒரு பெண் அழுது அரற்றி கருணை செய் என்று உன்னிடம் கெஞ்சும் போது 'கொஞ்சமும் இரங்காமல்,'
கல் போல் இருப்பாயோ? அஞ்சாதே என அருள் புரியும் கருணை வடிவானவன் நீ!
'அஞ்சல் என்றே அருள்வாய்! வஞ்சியாய்!'
'கொஞ்சமும் வஞ்சியாய்! அஞ்சல் என்றே அருள்வாய்!'
'இரங்கிலை அஞ்சல் என்றே' என எவரும் சொல்லா வண்ணம் 'அஞ்சல் என அருள்வாய்.'