Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

2 May 2014

திருவருட்பா - ஐந்தாம் திருமுறை - சண்முகர் கொம்மி - 1

இராகம் -ஆனந்தபைரவி - ஆதி தாளம்

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப்  பாடி அடியுங்கடி.

மாமயி லேறி வருவாண்டி -அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமை யிலாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி யடியுங்கடி.

பன்னிரு தோள்க ளுடையாண்டி - கொடும் பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்க ளனையாண்டி - அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.

சீர்திகழ் தோகை மயின்மேலே - இளஞ் செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருஞ் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
                                                                                   
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை.

13 November 2012

27.அன்பு

அன்பெனும்  பிடியுள்  அகப்படும் மலையே
       
           அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குள் படுபரம் பொருளே

           அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும்  கடத்துள் அடங்கிடும் கடலே

           அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

           அன்புருவாம் பரசிவமே!

                 திருச்சிற்றம்பலம்.

அன்பே வடிவான ஆண்டவன் அனைவருக்கும் 

இந்த தீபாவளித் திருநாளில் ஆனந்தத்தையும்

அனைத்து  இன்பங்களையும் அருள்வானாக.

12 November 2012

26.தேவதேவன்

ஆறுமுகப் பெருங் கருணைக் கடலே தெய்வ

யானைமகிழ்  மணிக்குன்றே அரசே முக்கட்

பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்

பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்

வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்

விளக்கமே  ஆனந்த   வெள்ளமே    முன்

தேறுமுகப்  பெரியஅருட்    குருவாய்  என்னைச்

சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.------வள்ளலார்

                     திருச்சிற்றம்பலம்


11 November 2012

25.பதி விளக்கம்

                               
                       உரைவளர் கலையே கலைவள ருரையே

                       உரைகலை   வளர்தரு   பொருளே

                       விரைவளர்  மலரே மலர்வளர் விரையே

                       விரைமலர்   வளர்தரு    நறவே

                       கரைவளர்  தருவே  தருவளர்  கரையே

                       கரைதரு    வளர்கிளர்     கனியே

                       பரைவள  ரொளியே  யொளிவளர்  பரையே

                       பரையொளி   வளர்சிவ   பதியே.

                                  திருச்சிற்றம்பலம்.

8 November 2012

22.அன்பு மாலை

அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப் பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே

தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடை எம்பெருமான்

மருள் நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே

இருள் நிறைந்த மயக்கம் இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இது தருணங் காணே.

                              -அருட் பிரகாச வள்ளலார்


                திருச்சிற்றம்பலம். 

28 October 2012

16.வடிவுடை மாணிக்க மாலை

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே

உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே

அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே

மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே

கானேர் அளகப்பசுங்  குயிலே அருட் கரும்பே

தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே

வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. -வள்ளலார்
               
                  திருச்சிற்றம்பலம்

26 October 2012

15. நமச்சிவாய சங்கீர்த்தன லஹிரி

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
     
 பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
       
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
       
 கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       
 நமச்சி வாயத்தை நான்மற வேனே.

            திருச்சிற்றம்பலம்

25 October 2012

14. போற்றித் திருப்பதிகம்

நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
         
           நீறுபூத்து ஒளிர்குளிர் நெருப்பே

நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி

           நெற்றியங் கண்கொளும் நிறைவே

நின்வசமாதல் வேண்டும்நான் போற்றி

            நெடியமால் புகழ்தனி நிலையே

நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி

            நெடுஞ்சடை முடித்தயா  நிதியே
                     

                  திருச்சிற்றம்பலம்

23 October 2012

13. போற்றித் திருப்பதிகம்

அருள்தரல் வேண்டும் போற்றிஎன்  அரசே
            அடியனேன் மனத் தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றி எந்தாயே
            ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருளுறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
            சிந்தை நைந் துலகிடை மயங்கும்
மருளறல் வேண்டும் போற்றிஎன் குருவே
            மதிநதி வளர்சடை மணியே.

மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
            வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
            அருளமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின்சீரே
          பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவில் பேரொளியே போற்றி என் தன்னைத்
          தாங்குக போற்றிநின் பதமே.
                     
                   திருச்சிற்றம்பலம்
              


2 October 2012

9. திருவருட்பா


தேன்என இனிக்கும் திருவருட் கடலே

தெள்ளிய அமுதமே சிவமே

வான் என நிற்கும் தெய்வமே முல்லை

வாயில்வாழ் மாசிலா மணியே

ஊன் என நின்ற உணர்விலேன் எனினும்

உன் திருக் கோயில்வந் தடைந்தால்

ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா

ஈதுநின் திருவருட் கியல்போ.

       திருச்சிற்றம்பலம்

30 September 2012

8. திருவருட்பா

               திருச்சிற்றம்பலம்

ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே

ஒளி உயிர் வளர் தரும் உணர்வே

வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே

வெளி நிறை வளர் தரு விளைவே

வளி வளர் அசைவே அசை  வளர் வளியே

வளியசை வளர் தரு செயலே

அளிவளர் அனலே அனல் வளர் அளியே

அளியனல் வளர்சிவ பதியே. -வள்ளலார்


29 September 2012

7. திருவருட்பா

                        திருச்சிற்றம்பலம்

என் இதயக்கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடியென் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வமிடர் செய்யாத தெய்வம்

அன்னியமல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாமென் அன்பான தெய்வம்

சென்னிலையிற் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

28 September 2012

6. திருவருட்பா

                                                                                    
                                                                                     திருச் சிற்றம்பலம்
                                                                    

    தாயாகித்  தந்தையுமாய்த்  தாங்குகின்ற தெய்வம்

    தன்னை நிகரில்லாத  தனித் தலைமைத் தெய்வம்
 
    வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

    மலரடியென் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம்

    காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்

    கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

    சேயாக எனை வளர்க்குந் தெய்வ மகாதெய்வம்

    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
                                                                                                   
                                                                                                     




27 September 2012

5. திருப்பள்ளி எழுச்சி


                                  திருச்சிற்றம்பலம்

பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
               பூத்தது பொன்னொளி பொங்கியதெங்கும்
தொழுது நிற்கின்றனன் செய்பணி எல்லாம்
               சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத
               முறைகளெல்லாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருட்பெருஞ் சோதி
                என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே!--திருஅருட்பா    

26 September 2012

4. தனித் திரு மாலை



தொடுக்கவோ நல்ல சொன்மலர் இல்லை நான்

துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை 

ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத்

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே
                                                                     
                                                                                    தயவு தான் நினக்கில்லை  உயிரையும்
                                                                                   
                                                                                    விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்

                                                                                    விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.

                                                                                                                                         --திருவருட்பா