Showing posts with label திருவருட்பா -- வள்ளலார் /-விண்ணப்பக்கலிவெண்பா - திருச்சுழி. Show all posts
Showing posts with label திருவருட்பா -- வள்ளலார் /-விண்ணப்பக்கலிவெண்பா - திருச்சுழி. Show all posts

17 December 2013

திருவருட்பா -சிவத்தலங்கள்

திருச்சுழியல்

                                                   - தீவணத்தில்
கண்சுழியல் என்று கருணையளித் தென்னுளம்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாட்சியே -

நெருப்பின் பொன் வண்ணமேனியுடையவன் இறைவன். அதாவது ஒளிமயமாய் இருப்பவன். அவன் திருமேனியைக் கண்களைச் சுழற்றாமல், கண்ணிமைக்காமல் காண முடியாது! அதனால் கருணையோடு, நான் உன் அகக் கண்களால் காணுமாறு தோற்றமளிக்கிறேன் என வள்ளல் பெருமானின்  உள்ளத்தில் சேர்ந்தானாம் இறைவன்.
உள்ளத்தில் சேர்ந்தவனை எப்படிக் காண்பது? கண்களுக்குத் தெரியாமல் இறைவன் ஜீவாத்மாவுக்கு சாட்சியாய் இருக்கிறானாம்! ஜீவன் - உயிர். ஆத்மா - சாட்சி.

ஶ்ரீ ரமணபகவான் அவதரித்த இவ்வூர் திருச்சுழி, அருப்புக் கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது.பார்வதி தேவியார் தம்மைச் சிவபெருமான் மணம் புரியும்படி வழிபட்ட தலம்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா, 204.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி