Showing posts with label குலசேகரப் பெருமாள். Show all posts
Showing posts with label குலசேகரப் பெருமாள். Show all posts

21 November 2012

35. -ஆழ்வார் திருமொழி


தருதுயரம் தடாயேல் உன் சரணலலால் சரணில்லை

விரைகுழுவு  மலர்ப்  பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே.1


வாளா லருத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ

ஆளாவுன தருளே பார்ப்பன் அடியேனே.

20 November 2012

34. திருவேங்கடமலையில்.....


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்

கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.  1


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையெனாவேனே. 2



19 November 2012

33. பெருமாள் திருமொழி


மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

வையந்தன்னொடும் கூடுவதில்லையான்

ஐயனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந்தேன் என் தன்மாலுக்கே.1

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்

நீதியாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப்

பேதை மாமணவாளன் தன்பித்தனே. 2

எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

அத்தனே! அரங்கா! என்றழைகின்றேன்

பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 3