31 December 2012

76.பெரிய புராணம்


               வாழ்த்து

     உலகெலாம்  உணர்ந்து  ஓதற்கு  அரியவன்

     நிலவுலாவிய  நீர்மலி   வேணியன்

     அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

     மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

              திருச்சிற்றம்பலம்


      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
               -------------------------

      வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே
      ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி.

      அருட் பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
      தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி.    -1.1. 2013

75. திருவருட்பா - சிவ நேச வெண்பா


                   நினைப்பித்தா     நித்தா      நிமலா   எனநீ

                   நினைப்பித்தால்     ஏழை    நினைப்பேன் - நினைப்பின்

                   மறப்பித்தால்    யானும்    மறப்பேன்   எவையும்

                   பிறப்பித்தாய்    என்னாலென்  பேசு.


                   உருவாய்    உருவில்      உருவாகி   ஓங்கி

                   அருவாய்     அருவில்    அருவாய்  -  ஒருவாமல்

                   நின்றாயே   நின்ற   நினைக்காண்ப    தெவ்வாறோ

                   என்தாயே    என் தந்தை   யே.

                                       திருச்சிற்றம்பலம்

                      

30 December 2012

74. திருவருட்பா -சிவநேச வெண்பா


       கண்ணப்பன்  ஏத்துநுதற்  கண்ணப்ப  மெய்ஞ்ஞான

       விண்ணப்ப   நின்தனக்கோர்  விண்ணப்பம் - மண்ணில்சில

       வானவரைப்  போற்றும்  மதத்தோர்  பலருண்டு

       நானவரைச்  சேராமல்  நாட்டு.


       பொன்னின்  றொளிரும்  புரிசடையோய்  நின்னையன்றிப்

       பின்னொன்   றறியேன்   பிழைநோக்கி - என்னை

       அடித்தாலும்  நீயே  அணைத்தாலும்   நீயே

       பிடித்தேனுன்  பொற்பாதப் பேறு.

               

                             திருச்சிற்றம்பலம்

29 December 2012

73. ஶ்ரீ ரமண ஜெயந்தி.

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே.

பிராணன் ஒடுங்கில் பிரக்ஞை ஒடுங்கும் என்போன் பாதம் வாழ்கவே;
பிராணா  யாமம்  சாதனம் என்னும் பெரியோன் பாதம் வாழ்கவே.

பெண் ஆண் பேதம் போக்கிடு என்று பகர்வோன் பாதம் வாழ்கவே;
பிறருக்கு ஈவது தமக்காம் என்னும் பெருமான் பாதம் வாழ்கவே.

குற்றம் செயினும் குணமாக் கொள்ளும் குரவன் பாதம் வாழ்கவே;
அணியார் அருணா சலத்தில் வாழும் அமலன் பாதம் வாழ்கவே.

திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.

                         -- ஶ்ரீ ரமண பாத மாலை, ஶ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை.

                            திருச்சிற்றம்பலம்



28 December 2012

72. ஆருத்ரா தரிசனம் --திருவருட்பா

கங்கைச் சடையழகும் காதன்மிகும்  அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் -திங்கள்தன் மேல்

சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்

நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் -தேக்குதிரி

புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கன்ணழகும் - தொண்டர்கள்தம்

நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற

முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர் செவ் விதழழகும் - நல்லவரைத்

தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளும் மலர் வாயழகும்

சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மேனி யினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசி போங்காண்.




27 December 2012

71. திருவருட்பா - வள்ளலார்


அற்புதப் பொன்  அம்பலத்தே ஆடுகின்ற அரசே

                ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே

கற்புதவு    பெருங்கருணைக் கடலே என் கண்ணே

                 கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே

வெற்புதவு  பசுங்கொடியை  மருவுபெருந்  தருவே

                  வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே

பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்

                   பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.


                             திருச்சிற்றம்பலம்

                  

26 December 2012

70. திருவாய்மொழி--நம்மாழ்வார்.

       என்னுள்  கலந்தவன்  செங்கனிவாய் செங்கமலம்

       மின்னும்  சுடர்மலைக்குக்  கண்பாதம் கைகமலம்

       மன்னுமுழு வேழுலகும் வயிற்றினுள்

       தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே.


       பலபலவே  ஆபரணம்  பேரும் பலபலவே

       பலபலவே  சோதிவடிவு  பண்பெண்ணில்

       பலபல கண்டுண்டு  கேட்டுற்று மோந்தின்பம்

       பலபலவே ஞானமும்  பாம்பணை மேலாற்கேயோ!